சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணையை திறம்பட அமல்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.