சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மத மோதலை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் ஆடியோ பதிவிட்டதால் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சர்ச்சையாக பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் பரவியது. விசாரணையில் பாஜக யாத்திரையை விமர்சிக்கும் பாடலை வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்ட நண்பரை மிரட்டும் வகையில் ராஜேந்திரன் ஆடியோ பதிவிட்டது.

The post சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: