விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை செய்ய பிரதிஷ்டை பூஜை

 

ராஜபாளையம், ஆக.7: ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை செய்யப்பட்டது. ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதிவழிவிடும் விநாயகர் கோவிலில் வருடம் தோறும்  மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற 36வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை செய்ய பிரதிஷ்டை பூஜை appeared first on Dinakaran.

Related Stories: