ஆடல், பாடல், குதிரையாட்டத்துடன் டிராமா கம்பெனி யாத்திரை நடத்துகிறார் அண்ணாமலை: மாணிக்கம்தாகூர் எம்பி தாக்கு

விருதுநகர்: ஆடல், பாடல், குதிரையாட்டத்துடன் அண்ணாமலை டிராமா கம்பெனி யாத்திரை நடத்துகிறார் என, மாணிக்கம்தாகூர் எம்பி தெரிவித்தார். கதி சக்தி அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரூ.7.73 கோடியில் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் அளித்த பேட்டி: ராகுல்காந்தி நாடாளுமன்றம் வர சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். 26 மணி நேரத்தில் எப்படி பதவியை பறித்தார்களோ, அதேபோல் 26 மணி நேரத்தில் அவரது பதவியை திரும்ப தரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.

ராகுல்காந்தி திங்கட்கிழமை வந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசுவார். மோடி, அதானி கொள்ளை குறித்து பேசுவார். அந்த நிலை வரக்கூடாது என்று மோடி, அமித்ஷா, அதானி ஆகியோரின் கூட்டுசதி வெளிப்பட்டுள்ளது. அண்ணாமலை டிராமா கம்பெனி யாத்திரை நடத்துகிறார். அவர் செல்வது பாதயாத்திரை கிடையாது. வாக்கிங் போகிறார். கூடவே டிராமா கம்பெனி மாதிரி ஆடல், பாடல், குதிரையாட்டத்துடன் செல்கின்றனர். ஆடல், பாடலுடன் நடக்கும் யாத்திரையை பாஜவினரே ஏற்கவில்லை. முதல் நாள் வந்த பொன்.ராதாகிருஷ்ணன், வானதி, எச்.ராஜாவை மதுரையில் காணவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆடல், பாடல், குதிரையாட்டத்துடன் டிராமா கம்பெனி யாத்திரை நடத்துகிறார் அண்ணாமலை: மாணிக்கம்தாகூர் எம்பி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: