கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் ஆயர் இம்மானுவேல் பர்னாண்டோ ஆகியோர் தங்கத்தேரை அர்ச்சிப்பு செய்து வைத்தனர். காலை 8.10 மணிக்கு பனிமய மாதா தங்கத்தேர் பவனி தொடங்கியது. மரியே வாழ்க, மரியே வாழ்க என்று விண்ணதிர கோஷம் எழுப்பியபடி மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். வீதிகளின் இருபுறமும் இருந்த வீடுகளின் மாடியில் இருந்தபடி மக்கள், தேர் மீது பூக்களை தூவி வழிபட்டனர். மதியம் 12 மணி அளவில் தேர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அந்தமான், மாலத்தீவு, மொரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
The post தூத்துக்குடி பேராலய திருவிழா பனிமய மாதா தங்கத்தேரில் பவனி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.