ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி சந்திக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடிக்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

நீலகிரி: ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி மற்றும் 37 யானை பாகன்களை சந்திக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தடைந்தார். மசினகுடியில் இருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்கிறார். மசினகுடியில் இருந்து முதுமலைக்கு செல்லும் முர்மு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிக்கிறார். தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிடுகிறார்

The post ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி சந்திக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடிக்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Related Stories: