ஆடிப்பெருக்கு பண்டிகை இறைச்சி விற்பனை அமோகம்

கரூர், ஆக. 4: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சமைத்து குடும்பத்துடன் கொண்டாடுவது வாடிக்கையாக உள்ளது. அதன்படி, கரூர் மாநகர பகுதிகளில் உள்ள மட்டன் கடைகள், சிக்கன் கடைகள் மற்றும் வெங்கமேடு, கரூர் அன்சாரி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பொதுமக்கள் ஏராளமானோர் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்ததால், பொதுமக்கள் காத்திருந்து இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

The post ஆடிப்பெருக்கு பண்டிகை இறைச்சி விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: