என்எல்சி சுரங்கத்தில் தீ விபத்து

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரண்டாவது சுரங்கத்தின் மேல் தளத்தில் மண், நிலக்கரியை வெட்டி எடுத்து கன்வேயர் பெல்ட் மூலம் மேலே கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்படும் ரூ.300 கோடி மதிப்பிலான ராட்சத இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுரங்கம் முழுவதும் கரும்புகையுடன், வானுயுர தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

The post என்எல்சி சுரங்கத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: