சென்னை கே.கே நகரில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதாக புகார்..!!

சென்னை: சென்னை கே.கே நகரில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு நடத்துநர் டிக்கெட் எடுத்துள்ளார். தனக்கு தேர்வுக்கு நேரமாகிவிட்டது பேருந்தை உடனே எடுக்குபடி நடத்துநரிடம் மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதத்தை அடுத்து கல்லூரி மாணவர் சதீஷை ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

The post சென்னை கே.கே நகரில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதாக புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: