போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து பெர்கா என்ற இடத்திற்கு 123 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.