சென்னையில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்வுக்காக போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

சென்னை: சென்னையில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்வுக்காக 4, 10, 13ம் தேதிகளில், காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 76 வது சுதந்திர தினவிழா வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார்.

சுதந்திர தினவிழாவை ஒட்டி காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம், இதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் 76 வது சுதந்திர தினவிழா ஒத்திகை ஆகஸ்ட் 4 ,10, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்வுக்காக 4, 10, 13ம் தேதிகளில், காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்வுக்காக போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: