பிரியங்கா சதுர்வேதியின் அழகை பார்த்து எம்பி ஆக்கிய ஆதித்யா!: ஷிண்டே அணி எம்எல்ஏ பேச்சால் மோதல்

 

மும்பை: பிரியங்கா சதுர்வேதியின் அழகை பார்த்து அவரை ஆதித்யா தாக்கரே எம்பி ஆக்கினார் என்று ஏக்நாத் ஷிண்டே அணியின் எம்எல்ஏ கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா (உத்தவ் அணி) எம்பியான பிரியங்கா சதுர்வேதி குறித்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் ஷிர்சாத், ‘பிரியங்கா சதுர்வேதியின் அழகைப் பார்த்து ஆதித்யா தாக்கரே (உத்தவ் தாக்கரேயின் மகன்) அவரை எம்பி ஆக்கிவிட்டார்’ என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தனியார் சேனலுக்கு பிரியங்கா சதுர்வேதி அளித்த பேட்டியில், ‘நான் எப்படி இருக்கிறேன், எங்கு இருக்கிறேன் என்பது குறித்து, தன்னுடைய ஆன்மாவை விற்ற துரோகி சொல்ல வேண்டாம்.

ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியைச் சேர்ந்த இந்த எம்எல்ஏவை, எதற்காக பாஜக இன்னும் தன்னுடன் வைத்திருக்கிறது? அரசியல் மற்றும் பெண்கள் குறித்த தனது பார்வையில், அவரது குணத்தை வெளிப்படுத்தி உள்ளார்’ என்றார். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ சஞ்சய் ஷிர்சாத், ‘காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதுர்வேதி, என்னை துரோகி என்று அழைப்பதற்கு தகுதியானவர் அல்ல. பிரியங்கா சதுர்வேதி, ஆதித்யா தாக்கரே குறித்து சிவசேனா மூத்த தலைவர் சந்திரகாந்த் கைரே கூறிய விசயத்தை தான், தற்போது நான் கூறினேன்’ என்றார். இவ்விவகாரத்திற்கு மத்தியில், இதுகுறித்து ஆதித்யா தாக்கரே கூறுகையில், ‘சஞ்சய் ஷிர்சத் போன்றவர்கள் கூறும் கருத்துகளை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார்.

The post பிரியங்கா சதுர்வேதியின் அழகை பார்த்து எம்பி ஆக்கிய ஆதித்யா!: ஷிண்டே அணி எம்எல்ஏ பேச்சால் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: