கேரள ஆளுநரின் கான்வாய் மீது கார் மோதல்: போதை ஆசாமிகள் 2 பேர் கைது

நொய்டா: கேரள ஆளுநர் ஆரிப் கான்வாய் மீது மோதுவது போல் வந்த போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். கேரள ஆளுர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பினார். ஆரிப் முகமது கானுக்கு பாதுகாப்பாக காவல்துறை வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றன. இரவு 10.45 மணியளவில் நொய்டாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று கேரள ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது மோதிக் கொண்டு முன்னே சென்று, சுதாரித்து நின்றது. அங்கு விரைந்த காவல்துறை குடிபோதையில் காரை ஓட்டி வந்த கவுரவ் சோலங்கி, மோனு குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கேரள ஆளுநரின் கான்வாய் மீது கார் மோதல்: போதை ஆசாமிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: