மேலும், 100 ஆண்டுகளாக நிலத்தின் உரிமையை தாங்கள் அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், பெரிய அளவிலான நிலத்தை குத்தகைக்கு விடும்போது அதன் வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால வரையறையில் குத்தகை வாடகையை உயர்த்த வேண்டும். அரசின் நிதி நிர்வாகத்தை பாதுகாக்கும் வகையில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நில நிர்வாக ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மதிப்புடைய அரசு நிலங்களின் ஆவணங்கள் காணாமல் போனதாக கூறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது என்று உத்தரவிட்டார்.
The post குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு நிலங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்: நில நிர்வாக ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.