இது குறித்து அறிந்த 25க்கும் மேற்பட்ட கண்டமனூர் வனத்துறை ஊழியர்கள், மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை பலமணி நேரம் போராடி முழுமையாக கட்டுப்படுத்தினர். இதை தொடர்ந்து பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து கண்டமனூர் வனத்துறையினர் கூறுகையில்,
கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மலைப்பகுதியில் உள்ள புற்கள், செடிகள் சருகு போல காய்ந்து கிடக்கின்றன. இதனால், காட்டுத் தீ பிடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. காட்டுத் தீ பரவலை தடுக்கும் வகையில், வனத்துறையினர் தொடர்ந்து மலைப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
The post வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலையில் காட்டுத்தீ: போராடி அணைத்த வனத்துறையினர் appeared first on Dinakaran.