இந்த நிலையில், கர்நாடக அணைகளான கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட நீரானது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,100 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஓகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றில் இறங்கவோ அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மேட்டூர் அணையை வந்து அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.