பாமக செயற்குழு கூட்டம்

 

ஈரோடு, ஜூலை 24: ஈரோட்டில் பட்டாளி மக்கள் கட்சியின் மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஈரோடு மாநகரில் நடந்து வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் இடையூறுகளை களைய வேண்டும். வாகன நிறுத்தம் இன்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது. விதிகளை மீறி கட்டிடம் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் 25ம் தேதி கொண்டாடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

The post பாமக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: