இதனை தொடர்ந்து அந்த பெண் தனது கணவர் மூலமாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அதிமுக நிர்வாகி குமாரனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவரது செல்போனை பறிமுதல் செய்ததில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவரை போக்சோ சட்ட உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு புழல் சிறையில் குமரன் அடைக்கப்பட்டார்.
The post தாம்பரம் அருகே இரும்புலியூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.