கடந்த 7 ஆண்டுகளாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிதிலமடைந்த நிலையில் இருக்கும் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மருத்துவ அவசரத்திற்கு கூட உரிய நேரத்தில் செல்ல முடியாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள் தார் சாலையை சீரமைத்து தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையை சீரமைத்து தரக்கோரி ஆதார் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
The post பொன்னமராவதி அருகே 7 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தார் சாலை: சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.