அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

பூந்தமல்லி: திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அவைத் தலைவர் தி.ப.கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜாவித் அகமத், காட்டுப்பாக்கம் ராஜகோபால் வரவேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன், முன்னாள் எம்.பி. நேமம் ஜெகநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பென்ஜமின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், ‘‘ஆகஸ்ட் மாதம் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதில் அதிக அளவில் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

The post அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: