தொடர்ந்து காலை 10 மணி அளவில் யாகசாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு முனியப்பன் கோயில் கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோயில், முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், ஆகாச கருப்புசாமி கோயில் ஆகிய கோயில்களின் கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மூலவர் முனியப்பன் சாமி உள்ளிட்ட சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்றார். 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தியாகதுருகம் அருகே முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.