அப்போது சென்னையை சேர்ந்த இந்து திராவிட மக்கள் கட்சி தலைவர் ரமேஷ் பாபு என்பவர் விசிக தலைவர் திருமாவளவன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் பாபு மீது நாகூர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ரமேஷ் பாபுவை சென்னை குரோம்பேட்டையில் கைது செய்த நாகை போலீசார் நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post விசிக தலைவர் திருமா, ஏடிஜிபி-க்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து அமைப்பின் நிர்வாகி சென்னையில் கைது..!! appeared first on Dinakaran.