தேஜஸ்வி யாதவ் பதவி விலக பேரவையில் பாஜ கோரிக்கை

பாட்னா: ரயில்வே ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக பாஜ கோரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே ஊழல் வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று துவங்கிய பீகார் சட்ட பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை பாஜ எம்எல்ஏக்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். நேற்று அவை கூடியதும்,பாஜ தலைமை கொறடா ஜனக்ராம் எழுந்து, இந்த விவகாரம் தொடர்பாக தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று கோரினார். அப்போது, முதல்வர் நிதிஷ்குமார் அருகே தேஜஸ்வி அமைதியாக அமர்ந்திருந்தார். அதன் பின் சில நிமிடங்களில் முதல் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

The post தேஜஸ்வி யாதவ் பதவி விலக பேரவையில் பாஜ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: