அதிகாலை துவங்கிய அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வலம் வந்தது. நாட்டிய குதிரைகள் நடனமாட, மேளம் தாளம் முழங்க கொண்டாட்டத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவை 3 முறை வலம் வந்தது. இதை தொடர்ந்து புனித சந்தனம், மக்பராவில் பூசப்பட்டு சந்தன பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு மாவட்டங்கள், நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று மலை பகல் தேர் கூடு நடைபெற உள்ளது.
The post ராமநாதபுரம் அருகே மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா சந்தனக் கூடு விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.