வீடு கட்டும் போதே தரை தளத்தில் தொட்டி ஒன்று அமைப்பதுடன் கிணறு, உரை கிணறுகளையும் அமைத்து சில ஆயிரங்கள் செலவிலேயே மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க முடியும் என அதனால் பயன் பெறுபவர்கள் கூறுகின்றனர். வருங்காலங்களில் கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்கிறார் மழை மனிதன் என அழைக்கப்படும் சமூக ஆர்வலர் சேகர் ராகவன். மழை பெய்யும் போதே அதனை சேமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்துவதுடன் அரசு உரிய முறையில் அதனை கண்காணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
The post சென்னையில் 30ல் 26 பகுதிகளில் அபாயகரமான நிலைக்குச் சென்ற நிலத்தடி நீர்: மீண்டும் தீவிரப்படுத்தப்படுமா மழைநீர் சேமிப்பு திட்டம்? appeared first on Dinakaran.
