இதில் 2 உக்ரைன் தளபதிகள் சுமார் 50 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ராஷ்ய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தாக்குதலில் 12 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது. இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்ட இடம் குறித்து புகைப்படங்களை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக உள்ளூர் வாசி ஒருவரை உக்ரைன் கைது செய்திருக்கிறது. ரஷ்யாவிற்காக உளவு பார்ப்பவர்களுக்கு ராஜ துரோக குற்றத்திற்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post உக்ரைனில் 2 தளபதிகள், 50 அதிகாரிகள் சுட்டுக் கொலை: கிரமடோர்ஸ்க் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு appeared first on Dinakaran.