இதுதெரிந்து இருவரும் அங்கிருந்து கள்ளக்குறிச்சி, மணலூர்பேட்டை வந்து, தச்சம்பட்டு வழியாக திருவண்ணாமலை சென்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மணலூர்பேட்டை சாலையில் போலீசார் நேற்று காலை காத்திருந்தனர். அசுர வேகத்தில் வந்த கொள்ளையர்களின் கார், அங்கிருந்து செட்டிப்பட்டு மற்றும் பெரும்பாக்கம் சாலை வழியாக திருவண்ணாமலை நோக்கி விரைந்து, அரசு கலைக்கல்லூரியை கடந்து சென்றது. சாலை தடுப்புகளில் மோதிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளையர்களின் காரை பின்தொடர்ந்து சுமார் 5 கி.மீ. தூரம் விரட்டிச்சென்ற போலீசார், சண்முகா அரசு பள்ளி அருகே காரை மடக்கினர். அதில் போதையில் இருந்த சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(24), யுவராஜ்(32) ஆகியோரை கைது செய்து கடலூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலையில், சினிமா பாணியில் கொள்ளையர்களின் காரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்த போலீசாருக்கு, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
The post திருவண்ணாமலையை அலறவிட்ட திருடன்- போலீஸ் கார் சேசிங் appeared first on Dinakaran.