இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இருப்பவர் ‘தல’ தோனி. இவர் கடந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெறுவார் என்ற தகவல் பரவியதால், அவருடைய ஒவ்வொரு அசைவுகளையும் ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் கடந்த மாதம் முழுவதும் தோனியை பற்றி செய்தியே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது. இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் விமானத்தில் பயணித்து கொண்டிருக்கிறார்.
விமான பயண நேரத்தை கழிக்க தான் வைத்திருந்த ‘டேப்’பில் ‘காண்டி கர்ஷ்’ கேமை விளையாடி கொண்டிருந்தார். அப்போது விமான பணிப்பெண் ஒருவர் தட்டில் சாக்லெட்டுகளை எடுத்து வந்து தோனியிடம் வழங்கினார். இதை பார்த்து மகிழ்ந்த தோனி, அன்புக்கு ஒரு சாக்லெட்டை எடுத்துக் கொண்டார். அப்போது, அந்த பணிப்பெண் ஒரு பேப்பரை கொடுத்தார். அந்த பேப்பரில் எதோ எழுதி இருந்தது. அதை படித்து பார்த்த தோனி, பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்தார். மீதமுள்ள சாக்லெட்டுகளை திருப்பி கொடுத்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post தட்டு நிறைய சாக்லெட் விமானத்தில் தோனிக்கு பணிப்பெண் சர்ப்ரைஸ் appeared first on Dinakaran.