பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட 2,761 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை பொருட்கள் விற்பனை 100% இல்லை என்ற நிலைமை 282 காவல் நிலைய எல்லையில் ஏற்பட்டுள்ளது. 282 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், தங்கள் காவல் நிலைய எல்லையில் போதை பொருட்கள் விற்பனை இல்லை என அறிவித்துள்ளனர். போதை பொருட்கள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த 18 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து வருவது பெருமளவு குறைந்துள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் பணி இடங்கள் காலி இல்லை என்ற நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post 282 காவல் நிலைய பகுதிகளில் 100% போதை பொருள் இல்லை: டி.ஜி.பி தகவல் appeared first on Dinakaran.
