வரிச்சியூர் செல்வத்தை காவலில் விசாரிக்க போலீஸ் மனு

விருதுநகர்: கூட்டாளி செந்தில்குமார் (37) என்பவரை சுட்டுக்கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்து உள்ளனர். இந்நிலையில் வரிச்சியூர் செல்வத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கவிதா, வரிச்சியூர் செல்வத்தை வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அன்றைய தினத்திற்கு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.

The post வரிச்சியூர் செல்வத்தை காவலில் விசாரிக்க போலீஸ் மனு appeared first on Dinakaran.

Related Stories: