கழிவுநீர் வடிகால் அடைப்பு: கருப்பராயன் கோவில் பகுதியில் மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு

 

திருப்பூர்,ஜூன்23: திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் வார்டு எண் 22க்கு உட்பட்ட கருப்பராயன் கோவில் வீதி பகுதி மக்களின் குறைகளை ஏற்று,மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார்.மேலும், அந்த பகுதியில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம்,மண்டல தலைவர் உமாமகேஷ்வரி,வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்,பத்மாவதி,வட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கழிவுநீர் வடிகால் அடைப்பு: கருப்பராயன் கோவில் பகுதியில் மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: