இந்நிலையில்தான் ஒன்றிய அமைச்சரவை நடத்திய கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி முதல் மார்ச் மாதம் 31ம் தேதி வரையிலான ராபி பருவ காலத்தில், விவசாயிகளுக்கான ஊட்டச்சத்து சார்ந்த உர மானியத்தை மாற்றி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலான காரிப் பருவ காலத்தில், பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் உரங்களுக்கான ஊட்டச்சத்து சார்ந்த மானிய விகிதங்களையும் நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் நடப்பு காரிப் பருவ காலத்தில் யூரியா உரத்துக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயும், டிஏபி-க்கு 38 ஆயிரம் கோடி ரூபாயும் மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது யூரியா உரம் ஒரு மூட்டை ரூ.276க்கும், டிஏபி (டை-அமோனியம் பாஸ்பேட்) உரம் ஒரு மூட்டை ரூ.1,350க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் நைட்ரஜன் உரத்துக்கான மானியம் ஒரு கிலோவுக்கு ரூ.76 என்ற அளவிலும், பாஸ்பரசுக்கு கிலோவுக்கு ரூ.41 வீதமும், பொட்டாசியத்துக்கு கிலோவுக்கு ரூ.15 வீதமும், சல்ஃபர் கிலோவுக்கு ரூ.2.8 வீதமும் மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு இவற்றுக்கான மானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது மானியம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post உரங்களுக்கு மானியம் அறிவிப்பு! appeared first on Dinakaran.