ஜகதாலயா வழங்கிய கிட்ஸ் பெஸ்ட் 2023, குழந்தைகளுக்கான திறமையை வெளிப்படுத்தும் கலை சார்ந்த போட்டிகள் 30-4-2023 அன்று செயிண்ட் பேட்ரிக்ஸ் ஐசிஎஸ்இ காந்தி நகர் அடையாறில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்குபெற்றுப் பரிசுகளை பெற்று சென்றனர். 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன, 6-8 வகுப்புகளுக்கான வகை 1 (வீரர்கள்), 3-5 வகுப்புகளுக்கான வகை 2 (தண்டர் போல்ட்ஸ்) மற்றும் 1 – 2 ஆம் வகுப்புகளுக்கான வகை 3 (டைனி டாட்ஸ்). குறிப்பாக எப்போதுமான போட்டிகளான கட்டுரை, பேச்சு, பாட்டு, நடனம் இவை களைத் தாண்டி இன்னும் குழந்தைகளின் மனநிலையை சுவாரஸ்யமாக மாற்றும் போட்டிகள் பல இந்த நிகழ்வில் இருந்தன.
வகை 1 போட்டிகள் – பானை ஓவியம், வகை 2 போட்டிகள் நினைவாற்றல் விளையாட்டு, காய்கறி செதுக்குதல், ஓவியம், வகை 3 போட்டிகள் – ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல், களிமண் மாடலிங், ஸ்லோகம்/கவிதை ஓதுதல் ஆகியவை நடைபெற்றன. சென்னை முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் இந்த விழாவில் பங்கேற்றனர். சென்னையின் புகழ்பெற்ற சிபிஎஸ்இ பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பாளரான திருமதி ஜெய்தவே இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இப்படியான கலைகள் குழந்தைகளின் குணநலன்களை மாற்றும், மேலும் ஒருவித ஒழுக்கம், பக்குவநிலைகளை உண்டாக்கும். குறிப்பாக மனதை ஒருநிலைப்படுத்தும் இப்படியான பயிற்சிகள் மூலம் படிப்பிலும் முன்னேற்றம் தென்படும்.
–
கவின்
The post படிப்பு மட்டும் போதாது! appeared first on Dinakaran.