அவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என மனம் குமுறிய சில இளைஞர்கள் பேனர் வைத்து தங்களின் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். குமரி மாவட்டம் கருங்கல் பத்திரப்பதிவு அலுவலகம், மேலச்சுண்டவிளை உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனரில், ‘வணக்கம் முக்கிய அறிவிப்பு. கருங்கல் மேலச்சுண்டவிளை பகுதியில் ஒருசில நபர்களின் திருமண வரன்களை மட்டும் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… நன்றி… நன்றி… தங்களது நற்பணிகள் தொடருமானால் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்! இப்படிக்கு பாதிக்கப்பட்டவர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post கஷ்டப்பட்டு சம்பந்தம் பேசுனாலும் விடமாட்றாங்களே… இந்த பையனுக்கா பெண் கொடுக்கிறீங்க? குமரியை அலறவிடும் ‘நல்ல உள்ளங்கள்’ புகைப்படம், பெயர் வெளியிடப்படும் என இளைஞர்கள் பேனர் appeared first on Dinakaran.