அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் நாய்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் புள்ளி மான் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் மான் பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனவர் ஜனார்த்தனன், வன காப்பாளர் சங்கீதா ஆகியோர் கொண்ட குழுவினர் இறந்த மானை மீட்டு ஒடுகத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மானை பிரேத பரிசோதனை செய்து அதனை தீயிட்டு எரித்தனர்.
The post வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்தது; புள்ளி மானை கடித்து குதறி கொன்ற நாய்கள்: ஒடுகத்தூர் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.