இதற்கிடையே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்கள் தற்போது திறக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அவற்றை காண்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கரடி சோலை அருவி மட்டும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. கொடைக்கானல் நகர் மன்ற கூட்டத்தில், உறுப்பினர்கள் கரடி சோலை அருவியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே விரைவில் கரடி சோலை அருவியை காண சுற்றுலாப்பயணிகள் அனுமதிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கரடி சோலை அருவியை காண கிடைக்குமா அனுமதி?: சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.