திருவையாறு ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருவையாறு, ஜூன் 18: திருவையாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார மையம் சார்பில் திருவையாறு ஒன்றியத்தில் பணிபுரியும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி 8 இடங்களில் நடைபெற்றது. பயிற்சியில் வானவில் மன்ற செயல்பாடுகள், கலைத் திருவிழா செயல்பாடுகள் மற்றும் உடல் நலம் சார்ந்து மாணவர்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் விர்ஜின் ஜோனா மற்றும் ஹேமலதா ஆகியோரர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை வழங்கினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல் நிலை விரிவுரையாளர் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அசோகன் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிரதீப் ஒருங்கிணைத்தார்.

The post திருவையாறு ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: