கரூர் அமராவதி ஆற்றில் அனுதியின்றி மணல் திருடிய மாட்டு வண்டி பறிமுதல்

கரூர், ஜூன் 16: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகே அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ள முயன்ற மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாலையூர் பகுதியை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் அவ்வப்போது புகார்கள் வருவது வழக்கம்.

அதன்படி திருமாலையூர் பகுதியை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றோர பகுதியில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியின்றி மணல் அள்ளும் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் இப்பகுதியில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அமராவதி ஆற்றங்கரையோரம் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மாட்டு வண்டியை ஒட்டி வந்த ராம்ராஜ் என்பவரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

The post கரூர் அமராவதி ஆற்றில் அனுதியின்றி மணல் திருடிய மாட்டு வண்டி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: