பிறகு நசியா, அழுது கொண்டே தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது சைக்கிளிங் குழுவில் பதிவிட்டுள்ளார். அதிலிருந்த முக்கிய நபர் தமிழக டிஜிபி பார்வைக்கு, அப்பதிவை எடுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் நசியாவிடம் இருந்த ஆதாரங்களை வைத்து, அந்த நபரை போலீசார் தேடினர். இந்நிலையில், ஆலந்தூரில் பதுங்கி இருந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நடன பயிற்சியாளர் அகிலன் என்கிற அகிலாண்டேஸ்வரனை (22) போலீசார் கைது செய்து, விசாரித்தனர்.
அதில், கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு, அவர் சென்னை வந்ததாகவும், இங்கு திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சம்பவத்தன்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post நடைபயிற்சி சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டான்ஸ் மாஸ்டர் கைது appeared first on Dinakaran.