ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!!

ராமநாதபுரம்: உலக பிரசித்தி பெற்ற ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. மேல தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் முன்னே வர பட்டத்து யானையுடன் வந்த சந்தன கூடானது தர்காவை வந்தடைந்தது.

இந்த விழாவால் ஏர்வாடி தர்கா நகர் முழுவதுமே மின்னொளியில் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏர்வாடி சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

The post ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: