இத்தாலி கிராண்ட்பிரீ பைக் ரேஸ்: டுகாட்டி பைக்கில் போட்டியிட்ட இத்தாலி வீரருக்கு கோப்பை

இத்தாலி: இத்தாலியில் நடைபெற்ற இத்தாலி கிராண்ட்பிரீ பைக் ரேஸில் டுகாட்டி வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்த பிரான்செஸ்கோ பாக்னாயா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். உலக சாம்பியன்ஷிப்பிற்கான இந்த மோட்டோ ஜிபி பந்தயத்தில் நட்சத்திரவீரர்கள் பலரும் வெற்றி வேட்கையுடன் போட்டியிட்டனர். பிரான்செஸ்கோ பாக்னாயா , ஜாக் மில்லர், மார்கோ பேசாக்க்ஷி, ஜார்ஜ் மார்ட்டின், சோஹன் சுஹார்க்கோ ஆகியோர் மீது ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

இதில் டுகாட்டி பைக்கில் போட்டியிட்ட உள்ளூரின் பாக்னாயா தனக்கே உரிய பாணியில் மின்னல் வேகத்தில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டி வெற்றி கனியை பறித்தார். முன்னதாக இப்போட்டியில் சிலர் விபத்தில் சிக்கியதால் பதற்றம் நிலவியது குறிப்பாக ரெப்சோல் ஹோண்டா வாகனத்தில் போட்டியிட்ட ஸ்பெயின் வீரர் மார்க் மாத்தியூஸ் இரண்டாவது சுற்றின் போது கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு களத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டன. பக்கினினாவுடன், ஜார்ஜ் மார்ட்டின் மற்றும் சோஹன் சுஹார்க்கோ ஆகியோரும் பதக்க மேடை ஏறினர். வி.ஆர்.46 பைக்கில் போட்டியிட்ட லூக்கா மார்ட்டின் 4ம் இடத்தை பிடித்தார்.

The post இத்தாலி கிராண்ட்பிரீ பைக் ரேஸ்: டுகாட்டி பைக்கில் போட்டியிட்ட இத்தாலி வீரருக்கு கோப்பை appeared first on Dinakaran.

Related Stories: