பேச்சுவார்த்தையில் உடன்பாடு டிட்டோஜாக் போராட்டம் ரத்து

சென்னை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுடன் (டிட்டோஜாக்) பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து, போராட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த டிட்டோஜாக் தீர்மானித்திருந்தது.

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர்கள் டிட்டோஜாக் உயர்மட்டக் குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி தலைமையில் பேச்சு நடந்தது. உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தொடர் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக டிட்டோஜாக் தெரிவித்துள்ளது.

The post பேச்சுவார்த்தையில் உடன்பாடு டிட்டோஜாக் போராட்டம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: