மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க அரசு ஆணையிடுகிறது. அணையின் நீர் இருப்பின் அடிப்படையில் முறை வைத்து நீர் வழங்க வேண்டும் என திருச்சி மண்டல பொறியாளருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

The post மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: