அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது 5ம் நாளாக வாதம் நடந்த நிலையில் வழக்கை ஐகோர்ட் ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடினார்.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: