தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை..!!

சென்னை: தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தென்மேற்கு பருவமழை கேரள பகுதியில் தொடங்கியுள்ள நிலையில், தென் கிழக்கு பகுதிகளிலும் பரவி உள்ளது. பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளுக்கு தேவையான சாதனங்கள் ஜே.சி.பி, மர அறுவை இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: