இந்நிலையில் ரயில் பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு வண்ணங்கள் தீட்டிய 9 பெட்டிகளுடன் நவீன வசதிகொண்ட மின்சார ரயில் ஆவடி பணிமனையில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை புறப்பட்ட மின்சார ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது.
பின்னர் அரக்கோணத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்னை வேளச்சேரிக்கு சென்றது. வண்ணமிகு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிச்சென்றதை கண்ட பயணிகள் பரவசம் அடைந்தனர். இதேபோல் மின்சார ரயில்கள் படிப்படியாக பல்வேறு வண்ணங்களில் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பயணிகளை கவரும் கலர்புல் மின்சார ரயில்: அரக்கோணம்-வேளச்சேரி இடையே இயக்கம் appeared first on Dinakaran.