ஆலங்குடி, கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 13 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல்

ஆலங்குடி : ஆலங்குடி கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழிப்பைகள் பறிமுதல்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதி பகுதிகளில் உள்ள கடைகளில் நெகிழிப்பைகள் அதிக அளவில் பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள் கடைவீதிப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டது ஆலங்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட 13 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு தடை உரிமையாளர்களுக்கு 5,300 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோன்று கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள் சோதனை மேற்கொண்டது மூன்று கிலோ நெகிழிப்பைகள் பரிந்துரை செய்யப்பட்டது மேலும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

The post ஆலங்குடி, கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 13 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: