வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சி: வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கைத்தறி, விசைத்தறிக்கு அளிக்கப்படும் மின்சார சலுகைகள் தொடரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதாலேயே இதுபோன்ற சிக்கல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

The post வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: