இதற்காக, அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உளவியல்பூர்வமாக பெண்கள் பிரச்னைகளை அணுகுவதற்காக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெங்களூருவில் உள்ள அகில இந்திய மனநல மருத்துவமனையில் நாளை முதல்கட்டமாக பெண்களுக்கான பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும் என கவனமாக கேட்டு, அவர்களின் பிரச்னைகளை சரிசெய்ய 120 மகளிர் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் அறிவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விசாரணையின் தரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த புதிய காவல் நிலையத்தில் திருநின்றவூர், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படும்.
The post பெண்களின் பிரச்னைகளை அணுக மகளிர் காவல் அதிகாரிகளுக்கு உளவியல் பயிற்சி: டிஜிபி சைலேந்திரபாபு தகவல் appeared first on Dinakaran.