நெல்லுக்கான கொள்முதல் விலை கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.143 உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், இந்த விலை உயர்வு உழவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவேற்றவில்லை. ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கை. எனவே, நெல்லுக்கான கொள்முதல் விலையை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். நெல் உற்பத்திக்காக செலவுகளை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக நிர்ணயிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.